sun

புதன், 15 செப்டம்பர், 2010

வாழ்வின் கனிகள்...



"அன்பு"உன் வாழ்வுதனில்
அரணக ஓங்கி நின்றால்,
அகிலமும் உன் வசமே..!


சாதிக்கும் காரியங்கள்
சாத்தியமாய் நிறைவுபட,
"சந்தோசம்" அதில் நீ காட்டு..!

"சாந்தம்" உன் வார்த்தையிலே
சரளமாக இருந்துவிட்டால்,
சாதிப்பாய் எதையும் நீ..!



"இச்சையடக்கம்" கட்டுப்பாட்டில்
இருந்துவிட்டால் உனக்கென்றும்,
இருளில்லை ஒளியுண்டு..!

"தயவு" காட்டி நீ வாழ்ந்தால்
தரணியிலே உன் பெயரோ,
தரமாக உயர்ந்து நிற்கும்...!

"நற்குணம்" இறைவனின்
நகலாக இருந்துவிட்டால்,
நன்றியிடும் இவ்வுலகம்..!

"நீடியபொறுமை" நிலைகொண்டால்
நீண்டநாள் உன் வாழ்வு,
நிலைக்கொள்ளும் இவ்வுலகில்...!

"சமாதானம்" காத்துவிட்டால்
சகல மனிதரும் உன் பக்கம்,
சார்பாக இனணந்திடுவர்..!


உறுதியான "விசுவாசம்"
உனக்கு கடவுளிடம் இருந்தால்,
உலகையுமே ஜெயித்திடுவாய்...!


                                                                                  ***sunil sj***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக