sun

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கிறிஸ்தவம்...!

தீண்டதகாதவர்களாய் துரத்தபட்டபோது,
எங்களை தீண்டீயது கிறிஸ்தவம்...!


காலராவால் மடிந்துபோனபோது,
மருந்துகளால் மீட்டது கிறிஸ்தவம்...!


பட்டினியால் உருகுலைந்தபோது,
பண்டங்கள் வழங்கியது கிறிஸ்தவம்...!


கோயிலுக்குள் நுழைய முடியாதபோது,
ஆலயம் கட்டி அழைத்தது கிறிஸ்தவம்...!


மூடர்களாய் இருந்தபோது,
மூதாதையரை படிக்க வைத்தது கிறிஸ்தவம்...!


பிழைக்க தொழில் இல்லாதபோது,
தொழிலோடு பொருள் தந்தது கிறிஸ்தவம்...!


அனாதையாய் அடிமைபட்டபோது,
எங்களை எஜமான்களாக்கியது கிறிஸ்தவம்...!


செல்லா காசாய் இருந்தபோது,
பொற்காசாக்கியது கிறிஸ்தவம்...!


பாதை தவறி பாவத்தில் விழுந்தபோது,
பாதை காட்டி அழைத்தது கிறிஸ்தவம்...!


மதமாற்ற தடையை தகர்த்தெறிந்து,
அன்பே மதமென்று போதித்தது கிறிஸ்தவம்...!


உலக வாழ்வு காட்டியது மட்டுமல்ல,
உன்னத வாழ்வை காட்டியதும் கிறிஸ்தவமே...!
                                                                                                     
                                                                                                        ***sunil sj***

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக